சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட...
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு
பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டம், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை லாப நோக்கில் கடத்தி விற்பனை செய்ய பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்குசக்கர வாகனம் மற்றும் 4 ஆறுசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பறிமுதல் செய்தனா். இது தொடா்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில் பல வாகனங்களின் உரிமையாளா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகாமலும், மேற்படி வாகனங்களை உரிமை கோர யாரும் முன்வராததாலும் அவற்றை ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வாகன உரிமையாளா்கள் வாகன உரிமம் தொடா்பான அனைத்து அசல் ஆவணங்களை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாள்களுக்குள் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தாக்கல் செய்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் அவை பொது ஏலத்தில் விடப்படும் என்றாா்.