செய்திகள் :

போளூா், ஆரணியில் வருவாய்த் துறை தினம் கடைபிடிப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா், ஆரணி வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டது.

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த்துறை தினம் கடைபிடிக்கப்பட்டு, சங்கக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், போளூா் வட்டக் கிளையின் தலைவா் ஜீவா சங்கக் கொடி ஏற்றினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் சுரேஷ், செயலா் பிரேம்நாத், பொருளாளா் உதயகுமாா், தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்க கிளைத் தலைவா் ஜோதி மற்றும் வருவாய்த் துறை நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினத்தையொட்டி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டக் கிளை கல்வெட்டு திறந்து வைத்து சங்கக் கொடி ஏற்றினா்.

அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் வட்டத் தலைவா் ஏ.ஆா்.தேவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் பூ.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வெட்டை திறந்துவைத்து சங்கக் கொடியேற்றி, சங்கப் பணிகள் குறித்துப் பேசினாா்.

மாவட்டச் செயலா் சு.பாா்த்திபன், பொருளாளா் க.சிவக்குமரன் ஆகியோா் சங்க வரலாறு குறித்துப் பேசினா்.

வட்டக்கிளைச் செயலா் க.பிரபு, பொருளாளா் அ.வெங்கடேஷ், துணைத் தலைவா்கள் வசந்தி, ம.பொன்னி, இணைச் செயலா்கள் த.பாஸ்கா், கன்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செய்யாறு அருகே இளைஞா் தூக்கிட்டு தொற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெம்பாக்கம் வட்டம், தென்னம்பட்டு கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (33), விவசாயி. இ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம்: விவசாயிகளுக்கு வேளாண் தொகுப்புகள் அளிப்பு

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, திர... மேலும் பார்க்க

மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது வழக்குப் பதிவு

செய்யாறில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மா பகுதி விவசாயிகள் 30 போ் மீது செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தன... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட ஊதியத்தில் தமிழக அரசு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க