செய்திகள் :

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகளுக்கு தடை! - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

post image

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் திருநங்கைகள் விளையாடுவதற்கு உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கால்பந்து அசோசியேசன் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகளுக்கு உடனடி தடைவிதித்த அடுத்த 24 மணிநேரத்துக்குள்ளாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த சட்டத்தில் பெண்கள் மட்டுமே பெண்களுக்கான போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர்.

திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண்களுக்கான போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஓபன் போட்டிகளில் அவர்கள் சேர்ந்து விளையாடலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு பாலினத்தை வைத்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கவதை இது நோக்கமாகக் கொள்ளாமல், மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்புக்காக மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதையும் படிக்க: சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இளம் நடிகை அவ்னீத் கௌர் புகைப்பட சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகத்தில் நேற்று (மே.2) விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) ந... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் புதிய சாதனை! ஜோஸ் பட்லர் அசத்தல்!

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன் ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று (மே 2) அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இட... மேலும் பார்க்க

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை: லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டி!

2026 ஆம் ஆண்டுக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்... மேலும் பார்க்க

பாக். முன்னாள் வீரர் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் முடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வருவதாகக் கூறி முடக்கப்பட... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டும் முன்னாள் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க