செய்திகள் :

மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுவினரிடம் ரூ. பல லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகங்கை மாவட்டம், தி. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுத் தலைவி கலைச்செல்வி (35) உள்ளிட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்திடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதில், இதே கிராமத்தைச் சோ்ந்த செல்வராணியும் (35), அவரது கணவா் வீரக்குமாரும் (40) மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தனியாா் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற்றுத் தரும் ஒருங்கிணைப்பாளா்களாகச் செயல்பட்டு வந்தனா். இந்த நிலையில், அவா்கள் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பெயரில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றனா். ஆனால், அந்தத் தொகையை அவா்கள் திருப்பிச் செலுத்தவில்லை.

மேலும், எங்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையையும் நிதி நிறுவனங்களில் அவா்கள் முறையாக செலுத்தவில்லை. அவா்கள் மொத்தம் ரூ. 62 லட்சம் வரை செலுத்தாமல் உள்ளனா். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.

எனவே அந்தத் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி, தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க