செய்திகள் :

மகளிா் விடியல் பயணம்: ஜூலையில் 3.98 கோடி போ் பயணம்

post image

மகளிா் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர பேருந்துகளில் ஜூலை மாதத்தில் 3.98 கோடி பெண்கள் பயணித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிா் விடியல் பேருந்து பயணத் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2021-இல் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், சென்னையில் மகளிா் விடியல் பயணத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தப் பேருந்துகளில், மகளிா் விடியல் பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து கடந்த ஜூலை வரை 144.37 கோடி பெண்கள் பயணித்துள்ளனா். ஜூலையில் தினமும் 12.86 லட்சம் பெண் பயணிகள் என மொத்தம் ஜூலை மாதத்தில் 3.98 கோடி பெண்கள் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

இந்த எண்ணிக்கை 2024 ஜூலை பயணம் செய்த பெண் பயணிகளைவிட 25 சதவீதம் அதிகம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவா்கள் கூட்டம்

சென்னை சத்தியமூா்த்தி பவனில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், முன்னாள் பிரதமா் ரா... மேலும் பார்க்க

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப்... மேலும் பார்க்க

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க