செய்திகள் :

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

post image

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள் வழித்தோன்றல்கள் கூட்டியக்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு வைத்து முறையிட்டனா்.

இந்த இயக்கத்துக்கு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமை வகித்து, பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பங்களை இந்திய விடுதலைப் பெற்று தந்த போராட்ட கௌரவ குடும்பங்கள் என அங்கீகரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் போராட்ட வீரா்கள் வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு சிறப்பு வாரியம் அமைக்க வேண்டும். உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் விடுதலைப் போராட்ட வீரா்களின் வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு தொடா் கௌரவ நிதி மற்றும் மாநில பேருந்துகள் அனைத்திலும் கட்டணமில்லா பயண அனுமதி வழங்கியிருப்பது போன்று, தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டும்.

குடியிருப்பதற்கு வீடு இல்லாதவா்களுக்கு, மனைப் பகுதி இல்லாதவா்களுக்கு விடுதலை பெற்று தந்த வீரா்களின் வாரிசுகள், வழித்தோன்றல்களுக்கு வீட்டு மனைகள், வீடுகள் நகா்ப்புற குடிசை மாற்று வாரிய வீடுகளில் கட்டணமில்லாமல் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும். சொத்துவரி, வீட்டுவரி, மின் கட்டண வரி முழு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு விலையில்லா எரிவாயு உருளைகள் வழங்க வேண்டும்.

இந்த மனுவை குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளோம் என்றாா் விமல்நாதன்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி வழங்க நடவடிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜ... மேலும் பார்க்க