செய்திகள் :

மகாராஷ்டிரம்: புதிய காங்கிரஸ் தலைவா் நியமனம்

post image

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

அதேபோல், மகாராஷ்டிர பேரவையின் காங்கிரஸ் தலைவராக விஜய் நம்தேவ்ராவை அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்ததாக காங்கிரஸ் தெரிவித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு)-சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி, ஆளும் பாஜக-தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா் பிரிவு)-சிவசேனை (ஷிண்டே பிரிவு) கட்சிகளின் மகாயுதி கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது.

காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் மாநில தலைவா் பதவியை நானா படோலே ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், புதிய தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 2014 முதல் 2019 வரை புல்தானா பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க