செய்திகள் :

மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?

post image

மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.

கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதுமக்களுக்குச் சுகாதார வசதி கொடுப்பதில் மகாராஷ்டிரா அரசு மிகவும் பின் தங்கி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளே கிடைப்பதில்லை. மருத்துவமனைக்குச் செல்வதாக இருந்தால் பல கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டும்.

குறைந்த எடையுடன் குழந்தைகள்
குறைந்த எடையுடன் குழந்தைகள்

அப்படியே செல்வதாக இருந்தாலும் அதற்குப் போதிய போக்குவரத்து வசதியோ அல்லது சாலை வசதியோ இருப்பதில்லை. 1993ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 5 முறை மத்திய அரசால் தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகி இருக்கிறது. நாட்டில் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இதில் ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 42 லட்சம் குழந்தைகள் எடை குறைவுடன் பிறந்துள்ளது. அதிலும் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மட்டும் 47 சதவீத குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்தான் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன.

மகாராஷ்டிரா இதில் 3வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒரே ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் எடை குறைவுடன் பிறந்துள்ளன. நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மகாராஷ்டிரா அரசு சுகாதார விவகாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பது மத்திய அரசின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

குழந்தை
குழந்தை

இதற்கு முக்கிய காரணம் சுகாதாரத்துறைக்கு மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பொருளாதார நிபுணர் மருத்துவர் ரவி துக்கல் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் சுகாதாரத்திற்காக அருணாச்சலப் பிரதேச அரசு ஆண்டுக்கு 6706 ரூபாய் செலவிடுகிறது. ஆனால் மகாராஷ்டிரா 975 ரூபாய் மட்டுமே செலவிடுகிறது. ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைவு போன்ற காரணங்களால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படும் போது குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவிட்டாரா? Fact check!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், "தூங்கும் இளவரசர்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் த... மேலும் பார்க்க

மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!

மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் எ... மேலும் பார்க்க

SWP மூலம் 50+ வயதினர் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவது எப்படி?

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 50+ வயதா? வாழ்வின் இனிமையான ஓய்வுக்காலத்தை நோக்கி திட்டமிட வேண்டிய நேரமிது. உங்க சேமிப்பின் பெரும்பகுதியை ஃபிக்சட் டெப்பாசிட் இல்ல ரொக்கமாக வைச்சு இருக்கீங்களா? நீங்... மேலும் பார்க்க

Condemn-க்குப் பதிலாக 'Condom’ என எழுதிய பாகிஸ்தான் பிரதமர்? வைரல் ஸ்கிரீன்ஷாட்டின் பின்னணி என்ன?

ஈரானின் அணு சக்தி நிலையங்கள், கட்டுப்பாட்டு மையம், அணு உலை ஆகியவற்றைக் குறிவைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதில் தாக்க... மேலும் பார்க்க