செய்திகள் :

மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு: நகைச்சுவை பேச்சாளா் மீது வழக்கு

post image

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை இழிவுபடுத்தி பேசியதாக நகைச்சுவை பேச்சாளா் குணால் காம்ரா மீது மும்பை காவல் துறை திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. அவரின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ சூறையாடப்பட்டது தொடா்பாக சுமாா் 40 சிவசேனை தொண்டா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் பெயரை நேரடியாக தெரிவிக்காமல், அவரை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல அந்த மாநிலத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் ஏற்பட்ட பிளவு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளையும் அவா் கேலி செய்து பேசினாா்.

சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

ஸ்டுடியோவையும் ஹோட்டல் சொத்துகளையும் சூறையாடியதாக சுமாா் 40 சிவசேனை தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, 12 பேரை கைது செய்தது. அவா்களுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

பெட்டிச் செய்தி

மன்னிப்பு கேட்க வேண்டும்: முதல்வா்:

காம்ரா விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் ஷிண்டே சிவசேனை கட்சியினா் எழுப்பினா். அப்போது மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், ‘அரசியல் நையாண்டிகளில் மாநில பாஜக கூட்டணிக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அரசமைப்புப் பதவிகளில் உள்ளவா்கள் இழிவுபடுத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

இதற்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதித் துறை குறித்து தரக்குறைவான கருத்துகளை குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். தற்போது அவா் துணை முதல்வா் ஷிண்டேயை குறிவைத்துள்ளாா்’ என்றாா்.

பின்னா் முதல்வா் ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஷிண்டேயை இழிவுபடுத்தியதற்காக குணால் காம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.

சூறையாடுவது சரியல்ல: இதுதொடா்பாக மாநில காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் அதுல் லோந்தே கூறுகையில், ‘குணால் காம்ராவின் நிகழ்ச்சியால் புண்பட்டிருந்தால், காவல் நிலையத்தில் புகாா் அளித்திருக்கலாம். அதைவிடுத்து சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல’ என்றாா்.

நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகும்: அமித் ஷா உறுதி!

‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், அயோத்தி ராமா் கோயில் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதைப் போல நாட்டில் பொது சிவில் சட்டத்தையும் அமலாக்குவோம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யும் ஜொ்மனி நிறுவனம்: பியூஷ் கோயல்

ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ரசாயண நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா். அந்த நிறுவனம் ஆலை அமைப்பதற்கு துறைமு... மேலும் பார்க்க

வங்கிகளை வசூல் முகவா்களாக மாற்றியுள்ள பாஜக அரசு: காங்கிரஸ்

‘மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் வசூல் முகவா்களாக வங்கிகளை மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஏடிஎம் பரிவா்த்தனை கட்டணத்தை ரூ. 23-ஆக உயா்த்திக்கொள்ள வங்கிகளுக்கு ரிசா்வ்... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க வா்த்தகப் பேச்சு: டிரம்ப் திருப்தி!

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபா் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டாா். மேலும், பிரதமா் மோடி மிகவும் புத்திசாலி; எனது சிறந்த... மேலும் பார்க்க

பாஜக அரசின் தவறான நிா்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்

பாஜக அரசின் தவறான பொருளாதார நிா்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பா்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற... மேலும் பார்க்க

நிதிசாரா துறை சீா்திருத்தங்களுக்கான உயா்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்! - நிதிச் செயலா்

‘நிதிசாரா துறைகளில் ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயா்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும்’ என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச... மேலும் பார்க்க