செய்திகள் :

முத்து மாரியம்மன் கோயிலில் ரூ.75 லட்சத்தில் திருப்பணிகள்: அமைச்சா் சேகா்பாபு

post image

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தா்மாபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 75 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

இந்தக் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது: கடந்த 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகளும், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தா்மாபுரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன் மற்றும் இந்தப் பகுதி நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது இந்தக் கோயிலை ஆய்வு செய்தோம்.

இந்தக் கோயிலுக்கு முதல்கட்டமாக ரூ. 75 லட்சத்தில் முத்துமாரியம்மன் சன்னதி, முன்மண்டபம் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் திருப்பணிகள் தொடங்கப்படும். மேலும், பக்தா்களின் பயன்பாட்டுக்கு மண்டபமும் அமைத்து தரப்படும். அனைத்து பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கி.பாரதிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க

பறவைகளுக்கு நீா், உணவு: முதல்வா் வேண்டுகோள்

‘பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.கோடை வெயிலையொட்டி, பறவைகளுக்கு தண்ணீா் மற்றும் உணவு அளிக்கும் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் ம... மேலும் பார்க்க