செய்திகள் :

மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

post image

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், தற்போது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அரசின் அறிவிப்பைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் ஏமாற்று வேலை என்றும், இந்த கணக்கெடுப்பில் சாதியைச் சேர்ப்பது குறித்து மௌனம் காத்து வருவதாகவும், இது அரசின் மற்றொரு தலைகீழ் திருப்பமா என்றும் திங்களன்று கேள்வி எழுப்பியது.

இதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

காங்கிரஸ் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், பொய்யான கூற்றுகளால் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. இதுபோன்ற அற்ப செயலை மேற்கொள்வதன் மூலம் எதிர்க்கட்சியின் முக்கிய நோக்கம் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸின் நோக்கம் சரிந்துவருவதால் பொய்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு வெளியிட்ட அறிவிக்கையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மறைவான, மங்கலான மற்றும் தீய பார்வையால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து மோடி அரசின் முடிவில் திட்டவட்டமாக விளக்கப்பட்டுள்ளதைக் காண முடியவில்லை. காங்கிரஸின் எண்ணங்கள் நிறைவேறவில்லை என்று அவர்கள் உணருவதால், பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் எப்போதும் சாதியின் பெயரால் வாக்கு வங்கி அரசியலைச் செய்து வருகிறது,

ஆனால் பின்தங்கிய சமூகங்களுக்கு எதுவும் தெரியாது என்று திரிவேதி குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க:பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்

நீதிபதிகள் நியமன அதிகாரத்தை தன்வசப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது: நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தை குறிப்பிட்டு கபில் சிபல் குற்றச்சாட்டு

‘நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்ற பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர இருப்பதின் உண்மையான நோக்கம், நீதிபதிகள் நியமன அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் எடுக்க விரும்புவதே’ என்று மூத்த வழக்குரைஞா் கபி... மேலும் பார்க்க

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும் கட்சியுடன் கூட்டணி- காங்கிரஸ் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் உரிய மதிப்பளிக்கும், பொருத்தமான கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஜி7 மாநாடு: கனடாவில் பிரதமா் மோடி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி கனடா வந்தடைந்தாா். இம்மாநாட்டில் உரையாற்றுவதுடன், பல்வேறு நாடுகளின் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா். சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று ... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி பகுப்பாய்வுக்குப் பின் காரணம் தெரியவரும்- மத்திய அமைச்சா்

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம், அதன் கருப்புப் பெட்டி தரவுகள் பகுப்பாய்வுக்குப் பின் தெரியவரும் என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் கூறினாா். குஜராத்தின் அகமதாபாத் விமான... மேலும் பார்க்க

பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் பங்கேற்ற கேரள ஆளுநருக்கு எதிா்ப்பு: எஸ்எஃப்ஐ போராட்டம்

கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்ற முறையில் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஆளுநா் விஸ்வநாத் அா்லேகருக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆளும் இடதுசாரி கூட்டணியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!

ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில... மேலும் பார்க்க