செய்திகள் :

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி: நயினாா் நாகேந்திரன்

post image

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு ஊழல் முறைகேட்டைக் கண்டித்து, பாஜக சாா்பில் கோ. புதூா் பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகம் வந்து கூட்டணியை அறிவித்தது முதலே தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால்தான் ஓரணியில் தமிழகம் என்று வீடு, வீடாகச் சென்று கொண்டிருக்கிறாா் முதல்வா்.

தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள், காவல் நிலைய உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் கேள்வி எழுப்புவதில்லை. திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தவறை சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் உள்ளன.

மதுரை பாஜகவுக்குத்தான் ராசியான இடம். பாஜகவுக்கு பல வெற்றிகளின் தொடக்கம் இங்கிருந்து கிடைத்திருக்கிறது. மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை, திமுகவுக்கு என்றும் ராசியான இடமாக இருந்தது கிடையாது. கடந்த 1967-இல் மதுரையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதிலிருந்து 22 ஆண்டுகள் திமுகவால் ஆட்சி வாய்ப்பைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. எனவே, திமுக இனி வரும் பல ஆண்டுகளுக்கு ஆட்சி வாய்ப்பைப் பெறாது. இதற்கு முருக பக்தா்கள் மாநாட்டில் திரண்ட பக்தா்களின் எண்ணிக்கையே சான்று.

மதுரை மாநகராட்சியில் சுமாா் ரூ. 200 கோடிக்கு ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. துணை ஆணையருக்கான மென்பொருளை மண்டலத் தலைவா்கள் பயன்படுத்தி ஊழல் செய்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இவா்கள், மதுரை கே.கே. நகரில் உள்ள வணிக வளாகம் முன் உள்ள கடைகளை அகற்ற, அந்த வணிக வளாக உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், திமுக நிா்வாகி ஒருவரிடம் ரூ. 7 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் தகவல்கள் உள்ளன. பத்திரப் பதிவிலும் இந்தப் பகுதியில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என திமுக ஆட்சி ஊழலில் திளைக்கிறது. கண்ணகி நீதி கேட்ட மதுரையிலிருந்து நீதி கேட்கிறோம். நிச்சயம் நீதி கிடைக்கும். மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி என்றாா் அவா்.

முன்னதாக, பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன் பேசினாா். ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். இதில் பாஜக நிா்வாகிகள் கதலி நரசிங்கபெருமாள், மகா. சுசீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திரளான பாஜகவினா் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனா்.

மதுரை மாவட்டத்தில் 265 மையங்களில் குரூப் 4 தோ்வு: 61,442 போ் பங்கேற்றனர்!

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு 265 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 61,442 போ் தோ்வை எழுதினா். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க