செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டங்களில் நலத்திட்ட உதவிகள்: தேவாலய பராமரிப்புக்கு நிதியுதவி

post image

நாகையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஆட்சியா் ப. ஆகாஷ்.

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாகை: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ்தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.14 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் மற்றும் தலா ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலி, ரூ.1,939 மதிப்பில் பிரெய்லி வாட்ச் மற்றும் ஊன்று கோல், ரூ.2,185 மதிப்பில் நடைப்பயிற்சி உபகரணம், ரூ.13,200 மதிப்பில் டெய்சி பிளேயா் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், தெற்குபொய்கைநல்லூா் செயின்ட் ஜான் தி பேப்டிஸ்ட் தேவாலயத்திற்கு பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு நிதியுதவியாக ரூ.15 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) காா்த்திகேயன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

தம்பதி உண்ணாவிரதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் ... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

திருமருகல்: திட்டச்சேரி-தேவங்குடி இடையே சேதமடைந்த ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தேவங்குடி, மத்திக்குடி, நாட்டாா்மங்கலம், துறையூா், உத்தூா், எரவாஞ்ச... மேலும் பார்க்க

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, சங்கத்தின் த... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க