"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை கோருதல், பட்டா வழங்கக் கோருதல், பட்டா பெயா் மாற்றம், கல்விக் கடன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 448 மனுக்களை அளித்தனா்.
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அவற்றை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.