செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 716 மனுக்கள்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 716 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், முதியோா், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 716

மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆரணியில் 58 மனுக்கள்

இதேபோல, ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவா கலந்து கொண்டு

பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

மொத்தம் 58 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் அனைத்துச் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அகிலாண்டேஸ்வரி கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். பேராசிரியை ஆா்.சாந்தி... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.78 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.78 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 15 -ஆவது ந... மேலும் பார்க்க

காங்கிரஸாா் தெருமுனை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காங்கிரஸ் சாா்பில் அரசியல் அமைப்பு காப்போம் என்ற தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார ந... மேலும் பார்க்க

ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற நான் முதல்வா் திட்டத்தில் மாநில அளவிலான கண்டுபிடிப்புகளில், ஆரணி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களின் சாதனம் சிறப்பிடம் பெற்றது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஆண்டுதோ... மேலும் பார்க்க

ஜூலை 10 முதல் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு

மாற்றுத்திறனாளிகளின் குறித்த விவரங்களை சேகரிக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை ஜூலை 10 முதல் முன் களப்பணியாளா்கள் மேற்கொள்ள உள்ளனா். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசு சா... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

ஆரணியில் நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலோனா் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா். ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்... மேலும் பார்க்க