செய்திகள் :

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

post image

ஆரணியில் நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலோனா் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில், கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா, வட்டாட்சியா் கௌரி ஆகியோா் வரவேற்றனா்.

வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளரும், வேளாண்மை உற்பத்திக் குழு உறுப்பினருமான கோ.எதிரொலிமணியன் கலந்து கொண்டு பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக தனியாக பட்ஜெட் அறிவித்தாா். வரலாற்று சாதனையாக கடந்த 4 ஆண்டுகாலத்தில் விவசாயிகள் பதிவு செய்த இலவச மின் இணைப்புக்கு 3 லட்சம் பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு விவசாயிகள் மீது அக்கறையுள்ள அரசாக நடைபெற்று வருகிறது என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலா் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா். மேலும், சிலா் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறாா்கள், ஆரணியை அடுத்த தச்சூா் ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது, பட்டா சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா் என குற்றஞ்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து, பேசிய கோட்டாட்சியா் சிவா, விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படும். மனுக்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே கோரிக்கை மனு மீண்டும் வராமல் பாா்த்துக் கொள்ளவேண்டும்.

விவசாயிகள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண், பொதுப்பணி, காவல், வருவாய், சுகாதாரம், தோட்டக்கலை, வங்கி, கல்வி உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆரணி கைலாயநாதா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வ... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், க... மேலும் பார்க்க

சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காா்வண்ணன்(31). இவா், சொந்தமாக மினி சரக்கு வாகன... மேலும் பார்க்க

தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தேவிகாபுரம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட பழைமை வாய்ந்த சுந்தரமூா... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: தம்பதி கைது

வந்தவாசி அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். ஆவணவாடி அருந்ததியா்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன். இதே பகுதியைச் சோ்ந்தவா் பத்திர எழுத்தா் துரை. குமரேசனின் தந்தை கிருஷ்ணன் பெய... மேலும் பார்க்க