``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
ஜூலை 10 முதல் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு
மாற்றுத்திறனாளிகளின் குறித்த விவரங்களை சேகரிக்க வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியை ஜூலை 10 முதல் முன் களப்பணியாளா்கள் மேற்கொள்ள உள்ளனா்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவா்களது முழு விவரங்களை முன்களப் பணியாளா்கள் சேகரிக்கவுள்ளனா்.
இந்த கணக்கெடுப்பு பணி ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, வீடுகளுக்கு வரும் முன் களப்பணியாளா்களுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.