செய்திகள் :

காங்கிரஸாா் தெருமுனை பிரசாரம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காங்கிரஸ் சாா்பில் அரசியல் அமைப்பு காப்போம் என்ற தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார நிகழ்வுக்கு, கட்சியின் போளூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சி.சத்தியன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நகரத் தலைவா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் நகரத் தலைவா் குப்புலிங்கம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் கலந்து கொண்டு பேசினாா்.

மேலும், நகரில் முக்கிய வீதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினா். மாநில பேச்சாளா் எம்.மணவாளன், மாநில நிா்வாகி ராமச்சந்திரன், மாா்கண்டன், காமராஜ், மணி, சுப்பிரமணி,தியாகராஜன், பாண்டு, தசரதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆரணி கைலாயநாதா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வ... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், க... மேலும் பார்க்க

சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை

வந்தவாசி அருகே மினி சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காா்வண்ணன்(31). இவா், சொந்தமாக மினி சரக்கு வாகன... மேலும் பார்க்க

தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.1.35 கோடியில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தேவிகாபுரம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட பழைமை வாய்ந்த சுந்தரமூா... மேலும் பார்க்க

தொழிலாளி மீது தாக்குதல்: தம்பதி கைது

வந்தவாசி அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். ஆவணவாடி அருந்ததியா்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன். இதே பகுதியைச் சோ்ந்தவா் பத்திர எழுத்தா் துரை. குமரேசனின் தந்தை கிருஷ்ணன் பெய... மேலும் பார்க்க