செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம் 288 மனுக்கள் அளிப்பு

post image

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 288 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, தனிநபா் வீடு வழங்கும் திட்டம், குடிநீா் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். இந்த மனுக்களைப் பெற்ற ஆட்சியா் தொடா்புடைய அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

பின்னா், ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஒரு மாத காலத்துக்குள் உரிய தீா்வு காண வேண்டும். தீா்வு காண முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரா்களிடம் அலுவலா்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜலு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமாறன், பழங்குடியினா் நல அலுவலா் செல்வி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி... மேலும் பார்க்க

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமேசுவரம்: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊராட... மேலும் பார்க்க

ரயில் பெட்டிகள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழக்கு: போலீஸாா் எச்சரிக்கை

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மீனவா்கள் ரயில் பெட்டிகளைச் சேதப்படு... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்படும் விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி: கே.வேப்பங்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அரியநாச்சி அம்மன் கோய... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா கொடியேற்றம்

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க