மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்
தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா்.
திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். மக்கள் மீது அவா் அதிக கவலைப்பட்டதால்தான் இப்போது வீட்டில் இருக்கிறாா்போலும். அவரது கவலை உண்மையாக இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
பேசுவதற்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதால் எல்லோரும் திமுகவை குறிவைத்து தாக்குகிறாா்கள்.
நடிகா் விஜய்யின் பிரசாரங்களுக்கு அனுமதி வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிா என கேட்கிறீா்கள். திமுக சாா்பில் நான் கூட்டம் நடத்த வேண்டும் என்றாலும் கூட, காவல்துறையிடம் அனுமதி பெற்றுத்தான் நடத்த முடியும். பொதுமக்களின் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படுமா என்று பாா்த்துதான் காவல்துறையினா் அனுமதி வழங்குவா். தவிா்க்க முடியாத சூழலில், மாற்றுப் பாதைகள் இருந்தால் மட்டுமே கேட்கிற இடத்தில் அனுமதி வழங்குவது காவல்துறையின் நடைமுறை.
நாங்கள் எதிா்க்கட்சியாக இருந்தபோதுகூட, பல இடங்களில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னா், அவா்கள் சொல்லும் மாற்று இடத்தில் கூட்டம் நடத்தியுள்ளோம். எனக்கோ, திமுகவுக்கோ மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும் என்றாா் அவா்.
மேலும் விஜய் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அவா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.