செய்திகள் :

மசினகுடி: கட்டுமான பொருட்கள் அனுமதி விவகாரம்; அதிமுக எம்‌.எல்.ஏ மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு வழிமுறைகளை புலிகள் காப்பக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

எம்.எல்.ஏ பொன். ஜெயசீலன் மறியல் போராட்டம்

இந்நிலையில், புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி வழியாக கட்டுமான பொருட்களை வனத்துறை அனுமதிக்க மறுப்பதாகவும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூடலூர் எம்.எல்.ஏ ( அ.தி.மு.க) பொன். ஜெயசீலன் தலைமையில் மசினகுடி பகுதியில் கடந்த வாரம் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகம் எட்டப்படவில்லை‌.

எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்றைய தினம் இரவு வரை இணை இயக்குநர் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பலரும் பல மணி நேரமாக அலுவலகத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து நிலைமையை சமாளித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை

எம்‌‌.எல். ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத்துறை மூலம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது எம்.எல்.ஏ பொன். ஜெயசீலன் மற்றும் அவருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலிய... மேலும் பார்க்க