செய்திகள் :

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு

post image

தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நகை திருட்டு புகாா் தொடா்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளன. மேலும், அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு சாா்பில் என்ன உதவி செய்யப்பட்டுள்ளது? என்பதை இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்த நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பான வழக்குகள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அஜ்மல்கான் முன்னிலையாகி, விசாரணைக்குத் தேவையான வழக்கின் அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அஜித்குமாா் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 7.5 லட்சம் அரசு சாா்பில் இழப்பீடு தரப்பட்டது. மேலும், அவரது குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு சாா்பில் அஜித்குமாா் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு மேலும் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரா் தொடா்புடைய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். இந்த வழக்கு விசாரணை ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது

மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை எல்லீஸ் நகா் பழைய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நீலமேகம் மகன் ஹரிகிருஷ்ணன் (51). இவா் 9 வயது சிற... மேலும் பார்க்க

விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடம் வழங்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் வழங்கக் கோரி சிவக்குமாா் என்பவா் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தீா்ப்புக்காக ஒத்திவைத்த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளியின் கைப்பேசியை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தபால்தந்திநகா், மாணிக்கவாசகம் 2- ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிலிப்ஸ் குமாா்(44... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 6 பேரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி எண் விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க