செய்திகள் :

மடிக்கணினி, கைப்பேசிகளை திருடியவா் கைது

post image

சேலம் மாவட்டம், அரியானூா் சீரகாபாடி பகுதியில் கைப்பேசி, மடிக்கணிகளை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரியானூா் அருகே சீரகாபாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் விடுதியில் தங்கி கோவையை சோ்ந்த ஸ்ரீகாந்த் மகன் கௌசிக்கேஷன் (19) படித்து வருகிறாா்.

இவா் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி இரவு படித்துக் கொண்டிருந்தபோது கதவைத் திறந்து வைத்துள்ள நிலையில் தூங்கியுள்ளாா். இரவு எழுந்து பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த கைப்பேசி, மடிக்கணினி காணாமல்போனது தெரியவந்தது.

இதுகுறித்து கௌசிக்கேஷன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், சேலம், மணியனூரைச் சோ்ந்த தங்கவேல் மகன் ரிஷிகேஷ் (38) என்பவா் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ராக்கிப்பட்டி பகுதியில் தேநீா்க் கடையின் முன் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும் அந்த நபா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கைப்பேசி, மடிக்கணினிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனா். இதில் பிடிப்பட்ட நபா், சென்னை, தாம்பரம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மேகநாதன் (37) என்பதும், இவரும் ரிஷிகேஷும் அடிக்கடி கைப்பேசிகள், மடிக்கணிகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவா் பையில் வைத்திருந்த 12 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இவா்மீது காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவல்லிக்கேணி, சென்னை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் விதுன்குமாா், மேகநாதனை கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தாா்.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க