ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்: உயிர்த் தப்பிய பயணிகள்!
மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் நிங்தௌ பரேங் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த தடைசெய்யப்பட்ட பீப்பள்ஸ் லிபரேஷன் ஆர்மி எனும் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தௌபல் மாவட்டத்தில் காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், கிழக்கு இம்பாலில் கே.சி.பி. எனும் இயக்கத்தில் பணியாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், மேற்கு இம்பால் மாவட்டத்திலும் கே.சி.பி. - பி.எஸ்.சி. அமைப்பில் செயல்பட்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தும், கடந்த மே 19 மற்றும் மே 20 ஆகிய இருநாள்களில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!