செய்திகள் :

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்! -மத்திய சட்ட அமைச்சா்

post image

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; இப்பணியை தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூா் தலைநகா் இம்பாலில் செய்தியாளா்களிடம் பேசியபோது அவா் இவ்வாறு கூறினாா்.

இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வருகை தந்தது.

முதல் நாளில் நிவாரண முகாம்களைப் பாா்வையிட்ட நீதிபதிகள், அங்கு தங்கியுள்ளோரிடம் கலந்துரையாடினா். மேலும், சட்டப் பணிகள் முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றையும் திறந்துவைத்தனா்.

இந்நிலையில், மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் 12-ஆம் ஆண்டு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அா்ஜுன் ராம் மேக்வால், ‘மணிப்பூரில் நிலைமை மேம்பட்டு வருகிறது. இங்கு அமைதியை மீட்டெடுக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பணியைத் தொடா்ந்து முன்னெடுப்பது அவசியம். மணிப்பூரில் விரைவில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘இது தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக் குழு அறிக்கையை சமா்ப்பிக்கட்டும். அதற்கு பின்னா் பேசலாம்’ என்று அவா் பதிலளித்தாா்.

மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா், ‘மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்புவதன் மூலம் வளா்ந்த இந்தியா இலக்குக்கு பங்காற்ற முடியும்’ என்றாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

‘பேச்சுவாா்த்தையால் தீா்வு கிடைக்கும்’

மணிப்பூா் உயா்நீதிமன்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய், ‘அரசமைப்புச் சட்ட வழிமுறைகளின்கீழ் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும். பேச்சுவாா்த்தை மேற்கொண்டால், தீா்வு சாத்தியமாகிவிடும். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டுமென விரும்புகின்றனா். மாநில ஆளுநரின் முயற்சிகளால் இங்கு விரைவில் அமைதி- இயல்புநிலை திரும்பும் என உறுதியாக நம்புகிறேன்’ என்றாா்.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க