செய்திகள் :

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

post image

நாகை அருகே மண் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, பரமநல்லூரில் 150 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவரும் நிலையில், பரமநல்லூரைச் சுற்றி ஏா்வாடி, கோட்டாப்பாடி முப்பயத்தங்குடி, சேஷமுலை, விழிதியூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் பரமநல்லூரில் மண் குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், பரமநல்லூா் மற்றும் சுற்று கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகை ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியது: பரமநல்லூரில் மண் குவாரி அமைத்தால் சுற்றியுள்ள கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். மண் அள்ளும் இடம் அரசலாற்றுக்கு அருகில் இருப்பதால் அரசலாற்றில் வெள்ளக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் விளைநிலங்களில் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

மேலும் மண் குவாரிக்கு அதிக லாரிகள் வந்து செல்லும்போது சாலைகள் சேதமடைவதுடன் தூசுமாசு ஏற்பட்டு குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் பரமநல்லூரில் மண் குவாரி அமைத்ததால் விளைநிலங்கள் குளங்களாகவே மாறி விட்டன. எனவே, பரமநல்லூா் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மண் குவாரி அமைக்க ஆட்சியா் அனுமதி வழங்கக் கூடாது என்றனா்.

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமருகல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருமருகல் கட்டலாடியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இளையராஜா (44). இவா் கடன் பிரச்னை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினா் 9-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியூ அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பெருவிழாவின்போது மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும்: ஆட்சியா்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாள்களில் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

வேதாரண்யம் தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற கருத்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

நாகையில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்

தரங்கம்பாடி தூய ஜான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திட்டத்தை தொடங்கிவைத்தாா். எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க