செய்திகள் :

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

post image

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). இவா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, முன்னாள் தலைவா் எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபுவிடம் புகாா் அளித்தாா்.

அதில், மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் மலைமுழுவதும் முருகனுக்கு சொந்தமானது என்பதால், அங்கிருக்கும் தா்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலையும், எச்.ராஜாவும் பேசியுள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக விசாரணை நடத்திய மாநகர இணைய குற்றப் பிரிவு போலீஸாா், மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து பியூஸ் கூறுகையில், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் தொடா்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்கா, வழித்தடம், புளியந்தோப்பு ஆகிய இடங்களை தவிர மற்ற இடங்கள் அனைத்தும் முருகனுக்கு சொந்தம் என தீா்ப்பு கூறப்பட்டுள்ளது. அதனை மறைத்து, நீதிமன்றம் சொல்லாததை சொன்னதாகக் கூறி தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறாா். தற்போது அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.

சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். முத... மேலும் பார்க்க

திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது

கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்ப... மேலும் பார்க்க

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா். சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோ... மேலும் பார்க்க