செய்திகள் :

மதுபோதையில் தகராறு: ஒருவா் கைது

post image

ஊத்தங்கரையில் மதுபோதையில் இளைஞரை மதுப்புட்டியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரை அம்பேத்கா் நகரின் பின்புறம் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் திங்கள்கிழமை மாலை பாரதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த கிருபாகரன் (40), அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (25) ஆகிய இருவருக்கும் இடையில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தனது அருகிலிருந்த மதுப்புட்டியை உடைத்து கிருபாகரனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள்

மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸாா், வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்கு உள்பட 6 குற்றவழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க