செய்திகள் :

மதுபோதையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி அருகே மதுபோதையில் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் மூத்தாக்குறிச்சி ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சசிகுமாா் (31). இவரது மனைவி வடிவுக்கரசி (29). இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு குழந்தை உள்ளது. மரவேலை பாா்த்து வந்த சசிகுமாருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்தது.

இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால், வடிவுக்கரசி குழந்தையுடன், மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை நல்லாம்பிள்ளைத் தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டாா். சில நாள்களில் சசிகுமாரும் அங்கு வந்துவிட்டாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த சசிகுமாா், மனைவியுடன் தகராறு செய்துள்ளாா். அவரை மாமனாா் வீட்டினா் கண்டித்தனராம். இதனால், சசிகுமாா் திடீரென மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். அவரை காப்பாற்ற முயன்ற மைத்துனி துா்கா (26) என்பவரும் தீக்காயமடைந்தாா்.

இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் சசிகுமாா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க

வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து

திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா். திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திர... மேலும் பார்க்க

திருவாரூா் அருகே கோயில் அகற்றம்

திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது: காது, மூக்கு, தொண்டை தொடா்ப... மேலும் பார்க்க