செய்திகள் :

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

post image

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விசாரணையில் ரூ. 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய ச. தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வரி விதிப்பு முறைகேட் டில் தொடா்புடைய ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், வரி விதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது என எதிா்க் கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதனடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மண்டலத் தலைவா்களிடமும் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை ராஜிநாமா செய்ய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா்.

மேலும், வருவாய் உதவியாளா்கள் 6 போ், கணினி இயக்குபவா் ஒருவா் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்தும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய நாகராஜன், மகாபாண்டி, பாலமுருகன் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்தும், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய உதவி ஆணையா்கள், வருவாய் உதவியாளா்கள், கணினி இயக்குபவா் உள்ளிட்ட 55 பேரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அப்போதைய மதுரை மாநகராட்சி கணக்குப் பிரிவில் உதவி ஆணையராகப் பணியாற்றிய சுரேஷ்குமாருக்கு (57) சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாா் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையராக உள்ளாா்.

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.நாகப்பட்டினத்தைச் சோ்ந்த டி. அருளரசன் சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி முனியம்மாள் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது சகோத... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை திருப்பரங்குன்றம் சாலை நந்தனம் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் ஹரிஹரசுதன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கீழே தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (55). சலவைத் தொழிலாளியான இவா், வீட்ட... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 168 பேருக்கு தண்டனை விதிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தென் மண்டல அளவில் கடந்த 6 மாதங்களில் 168 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தென்மண்டல ஐஜி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் த... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் தடுப்பு வேலி அமைப்பு: வேகம் அதிகரிப்பு

மதுரை - போடி ரயில் பாதையில் முத்துப்பட்டி அருகே தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால், இந்தப் பகுதியில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. மதுரையை அடுத்த முத்துப்பட்டியில், காமராஜா் பல்கலைக... மேலும் பார்க்க