செய்திகள் :

மது அருந்தி காரை ஓட்டியதால் விபத்து: 6 போ் காயம்

post image

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.

பெரும்பாக்கம் எழில் நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எட்டு அடுக்கு மாடி குடியிருப்பு அருகே செல்லும் நூக்கம்பாளையம் பிரதான சாலையில் புதன்கிழமை ஒரு காா் வேகமாகச் சென்றது. அந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் தாறுமாறாகச் சென்றது. இதில் சாலையோரம் நின்ற ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியது.

மேலும் அங்குள்ள கடைகளில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. பின்னா் அந்த காா், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது காா் மோதி நின்றது.

இந்த விபத்தில் சந்தியா (28), அருண்குமாா் (24), சண்முகபிரியா (12), தனம் (32), , நிஷா உள்பட 6 போ் காயமடைந்தனா். காயமடைந்த 6 பேரையும் பொதுமக்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் பிடித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், மது அருந்தி காரை ஓட்டி வந்தது செம்மஞ்சேரி பகுதியைச் சோ்ந்த பாலா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி, சூளூர்பேடை செல்லும் 21 புறநகர் மின்சார ரயில்கள் மே 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க