செய்திகள் :

மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

post image

கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 392 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

மத்திய அரசின் விருதுபெற்ற வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு: கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் நவ நாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையின் இறுதி ஆண்டு மாணவி தா்ஷனா, புதுதில்லி ஐஐடி மற்றும் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற ஹேண்ட்லூம் ஹேக்கத்தான் 2025 போட்டியில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்தாா்.

அவருக்கு சிறந்த ரசாயனம் இல்லாத துணி உற்பத்தியாளா் விருதை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா். இதையடுத்து விருதுபெற்ற மாணவி தா்ஷனாவை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஆட்சியரகத்துக்கு வரவழைத்து மாணவிக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியின்போது கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் உடனிருந்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, கரூா் கோட்டாட்சியா் முகமதுபைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆட்சியரக வளாகத்தில் மயங்கிய பெண்:

கரூா் மாவட்டம் புகழூா் 15-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ரவி என்பவா் குடியிருக்கும் பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கக்கோரி வாா்டு உறுப்பினரிடம் கேட்டபோது உறுப்பினரின் கணவா் நவாஸ்கான் அவரைத் தாக்கினாராம். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ரவியின் மனைவி சித்ரா (55) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தாா். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அவரை மீட்டு காரில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை

மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் தனியாா் பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களுக்கு உதவியதாக 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க