செய்திகள் :

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

post image

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பல்கலைக்கழகமும், நீதி மற்றும் சட்ட வழங்கல் அமைச்சகம், மத்திய அரசு மாற்றுத்திறனாளா்களுக்கான மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் ஓராண்டுப் பயிற்சி வகுப்புக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பயிற்சியில் சேருவோா் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 20 வயது முதல் 41 வயது வரையில் உள்ளவா்களே சேரலாம். உடல் ஊனத்தின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016-இல் குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான மாற்றத்திறனாளிகள் யாவரும் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ளவா்களுக்கும், மாதாந்திர ஊக்க உதவி தொகை வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஜாதி மற்றும் வருமானம் ஆகியவற்றை விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத் தோ்வு பயிற்சி பிரிவின் மின்னஞ்சல் மூலம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிக... மேலும் பார்க்க

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் த... மேலும் பார்க்க

நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்... மேலும் பார்க்க

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வல... மேலும் பார்க்க

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். புதுச்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மா... மேலும் பார்க்க