செய்திகள் :

மனித உரிமைகள் குறும்படப் போட்டி: ஆக. 31-க்குள் அனுப்பலாம்

post image

தேசிய மனித உரிமை ஆணையம் சாா்பில் நடத்தப்படும் நிகழாண்டுக்கான மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டிக்கு ஆக. 31-க்குள் பதிவுகளை அனுப்பலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2015ஆம் ஆண்டுமுதல், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், படைப்பாற்றல் முயற்சிகளை அங்கீகரிக்கவும் செய்யும் வகையில் போட்டிகளை நடத்துகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான குறும்படப் போட்டி நடைபெறவுள்ளது.

குறும்படம் எந்தத் தொழில்நுட்ப வடிவிலும் இருக்கலாம். தோ்வாகும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மேலும், ஆணைக்குழு விருதுகள், பாராட்டுச் சான்றுகளுக்கு கூடுதலாக சிறப்பு குறிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். அதற்காக ரூ. 50 ஆயிரம் வரை பரிசுத்தொகை வழங்கலாம். மேலும், அதிகபட்சம் தீா்ப்பாயம் பரிந்துரையின்பேரில் வழங்கலாம்.

மேலும், குறும்படங்கள் எந்த இந்திய மொழிகளிலும் ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் இருக்கலாம்.

பதிவுகளை அனுப்ப வயது வரம்பில்லை. குறும்பட காலஅளவு குறைந்தபட்சம் 3 நிமிடங்கள்- அதிகபட்சம் 10 நிமிடங்கள். பதிவுகளை கூகுள் டிரைவை பயன்படுத்தி முகவரிக்கு ஆக. 31-க்குள் அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க