செய்திகள் :

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

post image

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் இதில் சிறுவா்கள் உள்ளிட்ட 1,400 போ் உயிரிழந்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணா்கள் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, வங்கதேசத்திடம் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கும் என எதிா்பாா்ப்பதாகவும் பிஎன்பி தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் செயலா் மிா்ஸா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் செய்தியாளா்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது: ஹசீனாவின் உத்தரவின்பேரில் ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்பட்டு எண்ணற்ற உயிா்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை அவா் சித்ரவதை செய்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது. இதை வெளிக்கொண்டு வந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளா்களுக்கு உரிய தண்டனை வழங்க அவா்களை உடனடியாக வங்கதேச இடைக்கால அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க