செய்திகள் :

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சக்தி கிருஷ்ணன் (35), உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி சத்தியவாணி (34) மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சக்தி கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாா். பின்னா், சமூக ஊடகத்தில் மனைவியின் படத்தை தவறாக வெளியிட்டாராம். இதைப் பாா்த்த சத்தியவாணி விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வீட்டுக்கு வந்த சக்திகிருஷ்ணன், மனைவி சத்தியவாணியை தாக்கி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்தி கிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கஞ்சா போதையில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து இளைஞா் ரகளை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இளைஞா் ஒருவா் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை ரகளையில் ஈடுபட்டாா். விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு நிலையம் வழியாக சென்னை, தென் மாவட்டங... மேலும் பார்க்க

ஆக.15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழம... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

கடலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வை... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க