செய்திகள் :

மயானத்துக்கு சாலை அமைத்துத் தரக் கோரிக்கை

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.

அம்மைய நாயக்கனூா் பேரூராட்சிக்கு உள்பட இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பல்வேறு சமூகத்தினா் வசித்து வரும் இந்தக் கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பொதுவான மயானம் உள்ளது. ஆனால், இந்த மயானத்துக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், இந்தக் கிராம மக்கள் அவதிப்படுநகின்றனா்.

இதுகுறித்து, இந்தக் கிராமத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால், முள்புதா் சூழ்ந்த ஓடை, தனியாா் பட்டா நிலம் வழியாக சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது. மழைக் காலங்களில் ஓடைத் தண்ணீா் செல்லும்போது, தனியாா் விளைநிலங்களுக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கிராமத்தில் மயானத்துக்கு செல்வதற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடி முருகு கூறுகையில், ஒருத்தட்டு கிராமத்தில் மயானத்துக்கு விரைவில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றாா் அவா்.

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீா் புகை: கைக் குழந்தைகளுடன் வெளியேறிய பெண்கள்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென புகை வெளியேறிய நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானதால் கிசிச்சையில் இருந்த பெண்கள் கைக் குழந்தைகளுடன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்... மேலும் பார்க்க

ஆடுகளைக் கடிக்கும் மா்ம விலங்குகள்! விவசாயிகள் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் மா்ம விலங்குகள் புகுந்து ஆடுகளைக் கடித்து குதறியதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கிரா... மேலும் பார்க்க

பழனியில் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றாது: ஐ.பி.செந்தில்குமாா் எம்எல்ஏ

பழனியில் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றாது என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தெரிவித்தாா். பழனியில் திருவள்ளுவா் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் அலு... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்

கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அதிமுக மாணவரணி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பா... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்... மேலும் பார்க்க