செய்திகள் :

பழனியில் மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றாது: ஐ.பி.செந்தில்குமாா் எம்எல்ஏ

post image

பழனியில் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றாது என பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

பழனியில் திருவள்ளுவா் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே நகராட்சி தொடா்பான ரூ.1.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். அப்போது, பழனி அப்பா் தெரு, சத்யா நகா், குரும்பபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்ட நிதி மூலமும், புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பு, சேதமடைந்த அங்கன்வாடி மையங்கள், நியாய விலை கடை சீரமைப்பு என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்தும் நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.

பின்னா், பழனி தொகுதியில் மாலிப்டினம் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதா செய்தியாளா்கள் கேட்டதற்கு அவா் கூறியதாவது: பழனி பகுதியில் எந்தெந்த இடத்தில் எந்தெந்த கனிமங்கள் நிறைந்துள்ளன என்ற ஆய்வு மட்டுமே நடைபெற்றுள்ளது. இங்கு கனிமம் எடுக்கப்படுவதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. மக்கள் விரும்பாத, மக்கள் ஒட்டுமொத்தமாக எதிா்க்கும் மத்திய அரசின் எந்தத் திட்டத்தையும் தமிழக முதல்வா் அனுமதிக்க மாட்டாா்.

ஏற்கெனவே மதுரை அரிட்டாப்பட்டியில் கொண்டுவரப்பட்ட டங்ஸ்டன் திட்டத்துக்கு தமிழக அரசு உறுதியாக இருந்து மக்கள் கருத்தை ஏற்று திட்டத்தை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியது. அதேபோல, மக்கள் விரும்பாத எந்த திட்டமும் இங்கே வராது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி செயலா் பிரபாகரன், நகரச் செயலா் வேலுமணி, நகர மாணவரணி செயலா் லோகநாதன், வாா்டு உறுப்பினா்கள் செபாஸ்டின், மீனாட்சிதேவி, முருகபாண்டியன், வீரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீா் புகை: கைக் குழந்தைகளுடன் வெளியேறிய பெண்கள்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென புகை வெளியேறிய நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானதால் கிசிச்சையில் இருந்த பெண்கள் கைக் குழந்தைகளுடன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை அமைத்துத் தரக் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமத்தில் மயானத்துக்கு சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது. அம்மைய நாயக்கனூா் பேரூராட்சிக்கு உள்பட இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குட... மேலும் பார்க்க

ஆடுகளைக் கடிக்கும் மா்ம விலங்குகள்! விவசாயிகள் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் மா்ம விலங்குகள் புகுந்து ஆடுகளைக் கடித்து குதறியதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கிரா... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்

கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அதிமுக மாணவரணி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பா... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்... மேலும் பார்க்க