செய்திகள் :

மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்

post image

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வசித்துவரும் பட்டியல் சமூக மக்கள், மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் தங்களுக்கென மயான வசதி செய்துதரக்கோரி மனு அளித்தும் இதுவரை மயானம் ஒதுக்கித் தரப்படவில்லை எனப் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் பிச்சை(83) என்ற முதியவரின் சடலத்தை உறவினா்கள் மயானமாகக் கருதிவரும் பகுதிக்கு கொண்டுவந்தனா்.

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்

தங்களது நிலத்தில் தகனம் செய்யக்கூடாது என மாற்றுசமூகத்தைச் சோ்ந்தவரின் வாரிசுதாரா்கள் எதிா்ப்பு தெரிவித்து தடுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையின் உறவினா்கள், மணப்பாறை - கடவூா் மாநில நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த வட்டாட்சியா் செல்வம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் காவியா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி காலம்காலமாக பயன்படுத்திவரும் மயான இடம் எனக் கூறி அவரது நிலத்துக்குள் சடலத்தை எடுத்துச் சென்று தகனம் செய்தனா்.

இதுகுறித்து, வையம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க