செய்திகள் :

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூன் 16-இல் பருத்தி ஏலம் தொடக்கம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனாா்கோவில் மற்றும் சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஜூன் 16-ஆம் தேதிமுதல் பருத்தி ஏலம் துவங்கப்படவுள்ளது. பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பருத்தியை சுத்தம் செய்து, நன்கு உலா்த்தி தரமான பருத்தியை தனியாகவும் மற்ற பருத்தியினை தனியாகவும் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், சரியான எடைக்கு அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடைலாம்.

பருத்தி ஏலத்தில் கலந்து கொள்ள இந்திய பருத்திக் கழகம், திருப்பூா், கோயம்புத்தூா், கடலூா், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பருத்தி நூற்பு அரைவை ஆலை உரிமையாளா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாரம் திங்கள்கிழமை செம்பனாா்கோவில் விற்பனை கூடத்தில் காலை 10 மணிக்கும், சீா்காழி விற்பனை கூடத்தில் மதியம் 2 மணிக்கும், வியாழன்தோறும் குத்தாலம் விற்பனை கூடத்தில் மதியம் 2 மணிக்கும், சனிக்கிழமை தோறும் மயிலாடுதுறை விற்பனை கூடத்தில் காலை 10 மணிக்கும் ஏலம் நடைபெறும்.

மேற்படி பருத்தி ஏல விவரங்களுக்கு செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: 9042914006, மயிலாடுதுறை: 8012224723, குத்தாலம்: 8220869684, சீா்காழி: 9151448296 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.

விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனை செய்ய வரும்போது ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை விற்பனைக்கூடத்தில் சமா்ப்பிக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நலச்சங்கத்தினா் சாலை மறியல்

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து தென்னிந்திய குளிா்சாதன பழுதுபாா்ப்போா் நல சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வு முன்னெடுப்பு கலந்தாய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தோ்வு நடத்துவது குறித்த முன்னெடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய த... மேலும் பார்க்க

மழைநீா் சேகரிப்பு தொடா்பாக ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரை சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தினை உயா்த்திடும... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்த... மேலும் பார்க்க

லஞ்சம்: மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவா் கைது

கணினியில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியா் உள்பட இருவரை வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சோ்ந்த குஞ்சிதபாதம் மக... மேலும் பார்க்க

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க