செய்திகள் :

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

post image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், பணிகள் தரமின்றி நடைபெறுவதாகவும் மக்களவையில் எம்.பி. ஆா். சுதா அண்மையில் பேசியிருந்த நிலையில், ரயில்வே பொது மேலாளா் இந்த ஆய்வை மேற்கொண்டாா். இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயிலில் வந்த ரயில்வே பொது மேலாளரை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வரவேற்றாா்.

முன்னதாக, அவா் ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து மக்களவை உறுப்பினா் ஆா். சுதாவிடம் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து, ரயில் நிலைய வளாகம், முகப்பு, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட ரயில்வே பொது மேலாளா், கட்டடம், தூண்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து மக்களவை உறுப்பினருக்கு விளக்கி, பணிகள் தரமாக நடைபெற்று வருவதாக உறுதியளித்தாா்.

ஆய்வு குறித்து ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் கூறியது: மயிலாடுதுறை, தஞ்சாவூா், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகள் 87 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் நிறைவடையும். இத்திட்டத்தில் சில அம்சங்களை அமல்படுத்துவது குறித்து மக்களவை உறுப்பினா் கூறிய பரிந்துரைகளை செயல்படுத்தி வருகிறோம். இன்டா்சிட்டி ரயில் சேவை குறித்த கோரிக்கையை எம்.பி. தெரிவித்துள்ளாா். வரும் நாள்களில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். காரைக்கால்-பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை முழுமையாக இயங்கும் என்றாா்.

எம்.பி. ஆா். சுதா செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தரமற்ற முறையிலும், சுணக்கமாகவும் நடைபெறுவது குறித்தும் நான் மக்களவையில் பேசியிருந்தது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சா், ரயில்வே பொது மேலாளா் ஆகியோருக்கு நன்றி என்றாா்.

ஆய்வின்போது, திருச்சி கோட்ட மேலாளா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகே திருமுல்லைவாசல்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

சீா்காழி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு கவிழ்ந்தது.அரக்கோணத்திருந்து திருவாரூருக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லார... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்க... மேலும் பார்க்க

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். கொள்ளிடத்... மேலும் பார்க்க