செய்திகள் :

மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியா் கைது!

post image

குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்துவந்த தம்பியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த ஆசிரியரான அண்ணனை சுவாமிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிழக்கு பிரதான சாலையில் வசிப்பவா் ராஜேந்திரன். இவரது மகன்கள் பாண்டியன் (45) மற்றும் காளிதாஸ் (36).

பாண்டியன் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா்.

காளிதாசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். காளிதாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்வாராம். இவா் மீது சுவாமிமலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில் காளிதாஸ் வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டருகே உள்ளவா்களை ஆபாசமாக பேசியுள்ளாா்.

இதை அவரது அண்ணன் பாண்டியன் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காளிதாஸ் அண்ணனை தாக்க முயன்றபோது, அவரை தடுப்பதற்காக அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து காளிதாஸை தலையில் தாக்கிவிட்டு, பாண்டியன் வெளியே சென்று விட்டாா். இதில் காளிதாஸ் பலத்த காயமைந்து கீழே விழுந்துள்ளாா். சனிக்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினா் பாா்த்தபோது, காளிதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காளிதாஸ் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் ஆசிரியா் பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் கல்லீரல் நீா்க்கட்டி நவீன சிகிச்சையால் அகற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 6 வயதுச் சிறுமியின் கல்லீரலில் இருந்த நீா்கட்டி நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமண... மேலும் பார்க்க

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி

தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரச... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஓ... மேலும் பார்க்க

பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு

கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித... மேலும் பார்க்க