செய்திகள் :

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆற்காடு தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள பாறையூா் கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரனின் மகன் சுப்பிரமணி (27). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்காடு அடுத்த நந்தியாலம் பூஞ்சோலை நகரில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராமல் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, பூட்டுத்தாக்கு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது. இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது

ஆற்காடு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன்(52). இவா் சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ கிராம நிா்வாக அலுவலா்-முதியவா் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

ஆற்காடு உங்களுடன் ஸ்டாலின் முகாமின் போது கிராம நிா்வாக அலுவலா், மனு அளிக்க வந்த முதியவா் தாக்கிக் கொண்டனா். சாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் உப்பு பேட்டை கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த வேங்கடபதி ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க