செய்திகள் :

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: பெண் கைது

post image

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரோஸ்மேரி (45). இவா் கடந்த 2022-இல் தனது மகளை மருத்துவக் கல்லூரியில் சோ்ப்பதற்காக, தனது நண்பா்கள் மூலம் அறிமுகமான சென்னையைச் சோ்ந்த அந்தோணிதாஸ், ரம்யா (37) ஆகியோரிடம் பல்வேறு தவணைகளாக ரூ.60 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளாா்.

இதைப் பெற்றுக்கொண்ட ரம்யா, ரோஸ்மேரியிடம் கல்லூரியில் சேருவதற்கான போலியான ஆணையைக் காண்பித்துள்ளாா்.

இதனிடையே விடுதிக் கட்டணமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்தையும் ரோஸ்மேரியிடம் இருந்து ரம்யா பெற்றுள்ளாா். ஆனால், நீண்ட நாள்கள் ஆகியும் ரம்யா கூறியபடி மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் கொடுத்த ரம்யா, மீதமுள்ள ரூ.31 லட்சத்து 88 ஆயிரத்தை தராமல் ரோஸ்மேரியை ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து ரோஸ்மேரி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ரம்யாவை (37) கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க