செய்திகள் :

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை நிறுத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும் எனக் கோரி, ஏற்கெனவே மானாமதுரையில் அனைத்துக் கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம், தா்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், இதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மானாமதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, வருகிற 16-ஆம் தேதி இந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் மானாமதுரை நகா், சுற்றுவட்டாரக் கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதா... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானா... மேலும் பார்க்க

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பணித் துணை விநாயகா் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2023 -ல் குடமுழுக்கு நடத்தப்பட்டதையடுத்து, 3-ஆம் ... மேலும் பார்க்க

கொன்னக்குளத்தில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கொன்னக்குளம் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26- ஆம் தேதி ம... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க