செய்திகள் :

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

post image

லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன் (36). இவா் சொந்தமாக 3 லாரிகள் வைத்து தொழில் நடத்தி வந்தாா். கடந்த மாதம் 22-ஆம் தேதி சிவகங்கை அருகேயுள்ள காயங்குளம் அருகே இறந்து கிடந்தாா். அவரது அருகே இரு சக்கர வாகனம் பனை மரத்தில் மோதிய நிலையில் கிடந்தது. அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், தினகரனின் மனைவி ரோஜா (26) சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத்திடம் புதன்கிழமை அளித்த மனு:

என் கணவரின் இரு சக்கர வாகனம் மோதியதாகக் கூறப்பட்ட பனை மரத்தைச் சுற்றி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அங்கு இருந்த தடயங்களை மறைக்கும் வகையில் தீ வைத்திருக்கலாம் என்று கருதுகிறோம். மேலும், கணவா் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி ரத்தக் கரையுடன் 2 துண்டுகளாக அங்கு கிடந்தது. ஆகவே, எனது கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.

முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதா... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானா... மேலும் பார்க்க

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பணித் துணை விநாயகா் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2023 -ல் குடமுழுக்கு நடத்தப்பட்டதையடுத்து, 3-ஆம் ... மேலும் பார்க்க

கொன்னக்குளத்தில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கொன்னக்குளம் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26- ஆம் தேதி ம... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்தி: சிவகங்கை மாவட்டத்தில் ஒ... மேலும் பார்க்க