செய்திகள் :

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி

post image

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்தி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சம் மாட்டினங்களுக்கு தோல் கழலை நோய் வராமல் தடுக்கும் பொருட்டு, இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வரும் 30.9.2025 வரை நடைபெறவுள்ளது. இதற்காக 57 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினந்தோறும் 100 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் சினை மாடுகள் தவிர அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம்.

எனவே, கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோல் கழலை நோயிலிருந்து தங்களது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதா... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானா... மேலும் பார்க்க

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பணித் துணை விநாயகா் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2023 -ல் குடமுழுக்கு நடத்தப்பட்டதையடுத்து, 3-ஆம் ... மேலும் பார்க்க

கொன்னக்குளத்தில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கொன்னக்குளம் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26- ஆம் தேதி ம... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க