செய்திகள் :

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

post image

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மீது திமுக பெண் உறுப்பினா்கள் சுஹாசினி மற்றும் பச்சையம்மாள் ஆகியோா் தாக்குதல் நடத்தினா். தடுக்க வந்த 25-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சசிகலாவையும் தாக்கினா். இதன் காரணமாக, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் மணி (ஓமலூா்), ராஜமுத்து (வீரபாண்டி) ஆகியோா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

அதேபோல, பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவா் கோபிநாத் தலைமையில், பாஜக நிா்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம்: இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அம்பேத்கா் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவா் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தியை தாக்கிய திமுக பெண் உறுப்பினா்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாமன்றக் கூட்டத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட திமுக பெண் உறுப்பினா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க

சேலத்தில் புகையிலைப் பொருள் விற்பனை: 3 போ் கைது

சேலத்தில் போதை மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைதுசெய்தனா். சேலம் மாநகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ கந்தசாமி தலைமையிலான போலீஸாா், சூரமங்கலத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் வெடிப்பு: பல லட்சம் லிட்டா் குடிநீா் வீண்

மேட்டூரில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது. மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதியில் காடையாம்பட்டி காவிரி கூட்டுக் குடிநீா்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை காலம் முடிவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை 8,048 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வாகனங... மேலும் பார்க்க

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணைய... மேலும் பார்க்க

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் எ... மேலும் பார்க்க