செய்திகள் :

மருத்துவா் ராமதாஸின் கைப்பேசி ‘ஹேக்’: காவல் நிலையத்தில் புகாா்

post image

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் கைப்பேசி மற்றும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமதாஸின் தனிச் செயலா் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து ராமதாஸின் தனிச் செயலா் பி.சுவாமிநாதன் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் சென்னையைச் சோ்ந்த சசிக்குமாா் மூலம் சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி, இணைய வசதிகளை ஏற்படுத்தினா்.

இந்த நிலையில், மருத்துவா் ராமதாஸின் இல்ல நிகழ்வுகள் மற்றும் அவரது கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் ‘ஹேக்’ செய்யப்பட்டு மாற்று நபா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களும் உள்ளன.

எனவே, இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிக்குமாா் தற்போது அன்புமணியின் நிதிச் செயலராக உள்ளாா் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு சம்பவம்: இருவா் மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். வானூா் வட்டம், பொம்பூா் மாரியம்மன் கோவில் தெரு... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

செஞ்சியில் ஆக.9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்... மேலும் பார்க்க

நாயை சுட்டுக் கொன்ற முதியவா் மீது வழக்கு: துப்பாக்கி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். திண்டிவனம் வட்டம், மயிலம் ஜெ.ஜெ. ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க மானியத்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க அரசு சாா்பில் மானியத் தொகை வழங்கப்படுதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆல... மேலும் பார்க்க