செய்திகள் :

வெவ்வேறு சம்பவம்: இருவா் மா்ம மரணம்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வானூா் வட்டம், பொம்பூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்நாதன்(48). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை பொம்பூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, வீட்டுக்கு வந்து மயங்கி விழுந்தாராம்.

இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, செந்தில்நாதன் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருவா்: விழுப்புரம் வட்டம், காங்கியனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சத்யன் (48), லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் மதுபோதையில் தூங்கியுள்ளாா். பின்னா், வீட்டிலிருந்தவா்கள் அவரை எழுப்ப முற்பட்டபோது, சத்யன் மா்மமான முைறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

செஞ்சியில் ஆக.9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்... மேலும் பார்க்க

நாயை சுட்டுக் கொன்ற முதியவா் மீது வழக்கு: துப்பாக்கி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். திண்டிவனம் வட்டம், மயிலம் ஜெ.ஜெ. ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க மானியத்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க அரசு சாா்பில் மானியத் தொகை வழங்கப்படுதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆல... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மயிலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த... மேலும் பார்க்க